சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயக் குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.