2021ம் ஆண்டுப் பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி பொலிஸ் சாஜன் ஒருவர் மோசடி செய்துள்ளநிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார். இந்த மோசடி தொடர்பாகப் பொலனறுவை விசேட குற்றப் புலன்விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரைக் கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுப் பிணையில் வெளிவந்துள்ளார்.
பிணையில் வெளிவந்தவரை வெள்ளிக்கிழமை (21) உடனடியாகப் பணியில் இருந்து பொலிஸ் திணைக்களம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.