சட்டமா அதிபர் பதவியில் இருந்து தாம் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாகச் சஞ்சய் ராஜரத்தினம் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் 26ஆம் திகதி அவருக்கு 60 வயதான நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதி பரிந்துரை இரண்டு தடவைகள் அரசியலமைப்புப் பேரவையினால் அங்கீகரிக்கப்படவில்லை.