இந்தியா : கேரளாவுக்குச் சுற்றுலா வந்த ஐதராபாத்தை சேர்ந்த குடும்பத்தினர், கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி ஓடைக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கி உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பொலிஸார் மீட்டனர். எனினும், அவர்கள் வந்த கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. காரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கூகுள் மேப்பை பார்த்து சென்ற இரண்டு மருத்துவர்கள் ஆற்றுக்குள் காருடன் சிக்கி உயிரிழந்தனர்.