மத்திய வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.