காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஷாதியிலுள்ள குடியிருப்புப் பகுதியிலும், காசாவில் உள்ள அகதிகள் முகாம்களிலும், அல்துபா பகுதியின் குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகின்றது.