இலங்கை மகளிர் அணி, இந்தியா நோக்கி, பிரதமரின் உற்சாக வாழ்த்துகள்!

0
2

இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து வாழ்த்துகளை பெற்றது. 14 ஆசிய நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஷிப்பின் ஆரம்ப விழா நாளை (17) மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகள் 18 முதல் 27 வரை இந்தியாவின் பெங்களுரில் நடக்கவுள்ளன.

இலங்கை அணியில்: துலங்கி வன்னிதிலக (தலைவி), ஹசித மெண்டிஸ், ரஷ்மி திவ்யாஞ்சலி, கயங்கலி அமரவன்ஷ, திஷாலா அல்கம, ஷனிக பெரேரா, கயானி திசாநாயக்க, காயத்திரி கௌசல்யா, சுசீமா பண்டார, சச்சினி ரொட்ரிகோ, மல்மி ஹெட்டியாராச்சி, க்ளினி நிஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here