இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அவர் தமது விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை வருகின்ற முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பார்க்கப்படுகிறார்.