இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிறிஸ் ரோஜர்ஸை நியமிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான 46 வயதுடைய கிறிஸ் ரோஜர்ஸ் தற்போது விக்டோரியா மாநில அணிக்குப் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.
கிறிஸ் ரோஜர்ஸுடனுடனும் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடனும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கு முன்னதாகப் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை இறுதிசெய்வதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.