பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படையில் வேதனம் வழங்கப்படும் முறைமை மீது தனக்கு உடன்பாடு இல்லை என நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை மாற்றப்படும் வரை தற்காலிகமாக 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்கப்படுவதை உறுதி செய்வதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி தொடர்ந்து ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதேவேளை 1,700 ரூபாய் வேதனத்தை வழங்குமாறு கோரி பொகவந்தலாவை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.