உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய இந்திய அணி!

0
5

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இன்று (04) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்ததுடன், வெற்றி குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தது.

இந்நிலையில், நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்க இரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here