2025ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்திக் கொடுப்பனவு , அஸ்வெசும கொடுப்பனவு என்பன வழங்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்னும் சில மாதங்களில், 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.