கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று முற்பகல் தமது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்தபோது நீரிழ் மூழ்கியுள்ளார். இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், குறித்த சிறுவன் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.