பொதுத்தேர்தலில் நாமல் களமிறங்குவார்!

0
5

அடுத்தப் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினேன்.இப்போது விமல் தரப்பு தனிவழி சென்றாலும் ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கே கிடைக்கபெறும்.

வாசுதேவ நாணயக்காரதான் எமது பக்கம் முதலில் வருவார். பின்னர்க் கம்மன்பிலவுக்கும் வரவேண்டியேற்படும். திலிப் ஜயவீரவும் கோட்டாபய ராஜபக்சவுடன்தான் இருக்கின்றார். அந்தவகையில் சர்வஜன அதிகாரத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் வந்து, மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும்.இன்னும் இரு வாரங்களில் இது நடக்கும்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்ப் பொதுத்தேர்தல் நடக்கும் என நான் இன்னும் நம்புகின்றேன். அவ்வாறு பொதுத்தேர்தல் நடந்தால் தம்மிக்கப் பெரேரா அல்லது நாமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவார்கள்.” – என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here