டெல்ஃப்ட் தீவுக்கு அருகில் கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை வீரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்யும் போது கடற்படை வீரர் ஒருவர் இரு படகுகளுக்கு இடையே சிக்கி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய கடற்படை வீரரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.