மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள நீரேந்து பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று(25) காலை முதல் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.