கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 39 வயதுடைய மொரட்டுவை, ராவத்தாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.