ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐந்தாவது தடவையாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியா, இரண்டாவது அரை இறுதியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 27ஆம் திகதி எதிர்த்தாடும்.
ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு ஆகியன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.