ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமிக்கத் தலைமைத்துவத்தினால் ஒரு காலத்தில் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாடு இன்று ஒளியைக் காண்கிறது. “மந்தநிலையில் இருந்து நாடு விரைவில் மீளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் வளர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் செல்ல முடியும்.” என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கியத் தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐக்கியத் தேசிய கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாவகை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாவதை தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துச் செயற்பட்டன. எனினும், எதிரணில் உள்ள எம்.பிக்களுக்கு ஜனாதிபதியின் ஆளுமை தெரியும்.அதனால்தான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் அமோக வெற்றிபெற்றார்.
இது சஜித்துக்கும் தெரியும். அதனால்தான் டலஸ் அழகப்பெருமவை பலிகடாவாக்கிவிட்டு, ஜனாதிபதி வேட்பாளர் பதவியை அவர் தக்கவைத்துக்கொண்டார்.அடுத்த தேர்தலிலும் சஜித்துக்குத் தோல்விதான் ஏற்படப்போகின்றது. ஏனெனில் நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது நாட்டு மக்களுக்குப் புரிந்துவிட்டது. எனவே,எதிரணிகளின் போலி பிரசாரங்களை நம்பி இரவில் விழுந்த குழிக்குள் பகலில் விழுவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.
அடுத்தவாரமளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதம் கிடைக்கப்பெறும். ரணிலின் தலைமைத்துவத்தால்தான் இது சாத்தியமானது