திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். 22.06.2024