இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்து மூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும்.
குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று (18) தெரிவித்துள்ளார்.