அடுத்த 05 வருடங்களில் முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட இளையோர் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு, 2023/2024 உயர்தரப் பரீட்சைக்குத் தெரிவான மாணவர்களுக்கு ஜனாதிபதியால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இளைஞர் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்