கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் கடந்த புதன்கிழமை இரவு வரை வீட்டிற்கு வரவில்லை எனத் தெரிவித்துப் பெற்றோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். காணாமல் போன மூன்று மாணவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என வீரகுல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சிறுவர் – பெண்கள் பணியகம் மற்றும் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.