மட்டக்களப்பு – வெல்லாவளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வயல் காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தலையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், வெல்லாவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.