இறந்த குட்டியை 3 மாதங்களாகச் சுமந்து வரும் சிம்பன்சி!

0
7

இறந்த குட்டியை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகச் சுமந்து வரும் சிம்பன்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த சிம்பன்சி ஸ்பெய்னில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றிலேயே வசித்து வருகின்றது. நடாலியா என அழைக்கப்படும் குறித்த சிம்பன்சி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்க் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. எனினும் பிறந்த சில நாட்களில் குறித்த குட்டி இறந்துள்ளது. அதேநேரம் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, உயிரிழந்த குட்டியை தன் உடலோடு சுமந்து வருகின்றமை பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது சிம்பன்சிகளின் வழக்கமான நடவடிக்கை என்றும், அடர் வனப் பகுதிகளில் வசித்து வரும் சிம்பன்சிகள் மத்தியிலும் இந்த வழக்கத்தினை அவதானிக்க முடியும் எனவும் குறித்த உயிரியல் பூங்காவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here