குடிநீரை சேமித்து வைப்பதற்காகப் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சிலர் இந்தப் பிளாஸ்டிக் போத்தல்களைத் தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாகச் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தப் போத்தல்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தண்ணீரில் கசியும் என்று உணவு பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
இவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்றும் இது குறிப்பிடத்தக்க உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகளில் வெளியானதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள்ளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.