லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

0
2

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு பெறுவதற்காக, லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் மேற்கொண்டுள்ள பதிவுகள் காலாவதியான நிலையில் லெபனானில் பணியாற்றிவரும் இலங்கையர்களுக்கு, குறித்த பதிவைப் புதுப்பிப்பதற்காக இந்தச் சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் நிலவும் அசாதாரண நிலைமையினைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிவரை இந்தச் சலுகைக் காலம் அமுலில் இருக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here