தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

0
5

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 வாக்காளர் இடாப்பே இதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தபால் மூல வாக்கிற்கு விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இம்முறை தேர்தலுக்காக மீண்டும் தமது தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் கட்டாயமானது.

அதன் பிரகாரம், தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக்கு (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here