ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.