காட்டு யானையை எரியூட்டிப் புதைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குருநாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார வேலியில் சிக்குண்டு, குறித்த யானை சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிக்கவரெட்டிய பகுதியில் உயிரிழந்த குறித்த யானையை, காணியின் உரிமையாளரான 47 வயதுடையவர் பாகங்களாக வெட்டி, அதனை எரியூட்டியதன் பின்னர்ப் புதைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைதானவருக்கு எதிராக, சட்டவிரோதமாகப் பொறிகளைப் பயன்படுத்தியமை, வனவிலங்கு கொலை மற்றும் கொலையினை மறைத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த காட்டு யானை 7 முதல் 8 அடி உயரமுடையதாக இருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.