தென்கொரியா தலைநகர் Seoul பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் மகிழுந்து ஒன்று விழுந்ததில் 70 வயதுடைய பெண்ணொருவரும் 80 வயதுடைய ஆணொருவரும் காயமடைந்துள்ளதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் குழி எவ்வாறு தோண்டப்பட்டது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.