2025 ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் தலைவராகச் செயற்படச் சூர்யகுமார் யாதவிற்கு அழைப்பு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
இதற்கமைய ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சூர்யகுமார் யாதவிற்குக் கொல்கத்தா அணியிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.
முன்னதாகச் சூர்யகுமார் யாதவ் 2014 முதல் 2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.