பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்குச் செல்வதற்குப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் கடந்த 30 வருடங்களாகப் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.