எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு, வேட்பாளர் ஒருவர் எவ்வளவு தொகை செலவிட முடியும் என்பது தொடர்பில் இன்றைய தினம் (16) இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகச் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான பெஃப்ரல் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே இன்றைய தினம் (16) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்படும் எனப் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.