மேலும் இருவர் கட்டுப்பணம் செலுத்தினர்!

0
5

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட 2 பேர் இன்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here