பொது மக்களுக்காக மக்கள் துறை!

0
5

பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கத்தின் எதிர்காலப் போக்குக் குறித்துக் கலந்துரையாடும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்குனராக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here