வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி!

0
4

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புஷி அணைக்கு அருகே உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட, திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை பதிவானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் அந்த ஐந்து பேரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் சுற்றுலா சென்றவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளப்பெருக்கில் அந்தக் குடும்பம் சிக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

இதேவேளை புஷி அணைக்கு அருகே உள்ள அந்த ஆற்றிற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here