விலை குறைப்புக்கு மாஃபியா இடையூறு!

0
5

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான உண்மையை கூற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா, தேங்காய் எண்ணெய்,முட்டை உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது தமது தொழிற்துறையைப் பாரியளவில் பாதித்துள்ளதாலேயே,வெதுப்பக உற்பத்திகளின் விலையினைக் குறைக்க முடியாதுள்ளது. கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும்.

எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் விளக்கமளிப்பதற்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here