தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரையில் 10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க நேற்று (10) தெரிவித்தார். மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்தச் சில நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பூர்த்திச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.