வாகன இறக்குமதித் தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் 2024 ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு எந்தப் பிரச்சினையையும் சந்திக்காத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.