வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

0
7

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான அம்புலன்ஸ்கள், குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான தொழிற்சாலை வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

விசேட தேவைகள் கருதி இந்த வாகனங்கள் அவ்வப்போது சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கார்கள், வான்கள், கெப் ரக வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை அடுத்த ஆண்டு (2025) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here