லொறி மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

0
5

சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here