யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காகக் குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார். உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காகப் பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காகத் தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களைக் குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள், அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்துப் பொதுமக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.