ரயில்-யானை மோதல்: சேதம் புணரமைப்பு, சேவை மீண்டும் வழமைக்கு!

0
1
கொழும்பு-மட்டக்களப்பு ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டு, சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மின்னேரிய-ஹிங்குரக்கொடை இடைப்பட்ட ரொட்டவெவ பகுதியில் நேற்று (18) விபத்து ஏற்பட்டது.

கொலன்னாவை எண்ணெய் முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைகள் மோதியதால், ரயில் பாதை சேதமடைந்ததுடன், எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்தன. இவ்விபத்தில் இரண்டு காட்டு யானைகள் பலியாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here