மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு!

0
3

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here