2024ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரத் தமது எக்ஸ் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும், காலாண்டிற்கு ஒரு தடவை மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யக் கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தில் திருத்தம் செய்யப்படவுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் கஞ்சன விஜேசேகரக் குறிப்பிட்டுள்ளார்.