மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை பலி!

0
8

கேகாலை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக இன்று காலை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குறித்த பள்ளத்தில் குழந்தை இருந்தபோது, அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், அங்கு வந்த பிரதேசவாசிகள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாகக் கேகாலை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here