மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இடமாற்றப்பட்டது; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

0
9

மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது இன்று (10) முதல் திராய்மடுவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கீழ் காணப்படும் சில பிரிவுகள் மறு அறிவித்தல் வரை பழைய மாவட்ட செயலகக் கட்டடத்திலேயே இயங்கும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மக்கள் தங்கள் தேவைகளை உரிய இடத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பழைய மாவட்ட செயலகத்தில் இயங்கும் பிரிவுகள்

விளையாட்டுப்பிரிவு
நுகர்வோர் அதிகாரசபை
சிறு கைத்தொழில் பிரிவு
சமூகப் பாதுகாப்புச் சபை
பிரதிப் பதிவாளர் நாயகப் பிரிவு (கிழக்குவலயம்)
காணிப் பதிவாளர் பிரிவு
நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவு
மனித வள அபிவிருத்தி அதிகாரசபை
மாநாட்டு மண்டபம்
UNDP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here