உயர்நீதிமன்றின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் நாளைய தினம் பதில் சட்டமா அதிபராகச் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பதில் சட்டமா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி சட்டமா அதிபராகப் பதவியேற்ற சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.