தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளது. இதனை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளன. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது. இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்குக் திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal எனும் பெயர் வழங்கப்படவுள்ளது.
இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.